அதில் ஒன்றுதான் இந்த வல்லநாடு சரணாலயம். கிண்டி தேசிய பூங்கா, முதுமலை வனவிலங்கு காப்பகம், கோடியக்கரை சரணாலயம் ஆகிய மற்ற மூன்று சரணாலயங்களிலும் வெளிமான்களை காணலாம். இந்த வல்லநாடு சரணாலயம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவில் தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் உள்ளது.
இந்த சரணாலாயம் அமைந்துள்ள இடம் புதர் காடுகளை உடையது. ஆதலால் மிக கனமுடைய மரங்களை இங்கு காணலாம். 19ஆம் நூற்றாண்டு வரை இந்த வகையான வெளிமான்கள் இந்தியாவில் அதிகம் காணப்பட்டன, ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவிளேயே உள்ளன. பெரும்பாலும் இந்த மான்கள் சமமான நிலப்பரப்புகளிலேயே வாழும், ஆனால் சூழ்நிலை மாற்றங்களால் தற்போது காடுகளில் வசிக்கின்றன.
இந்த வகை மான்களின் முக்கிய உணவு புல், மேலும் இவை அதிகபட்சமாக 16 வருடங்கள் மட்டுமே உயிர்வாழும். வெளிமான் மட்டுமல்லாது இந்த சரணாலயத்தில் குரங்கு, புள்ளிமான், காட்டு பூனை, கீரிப்பிள்ளை, கருப்பு முயல், பாம்புகள் போன்ற விலங்குகளும் இங்குள்ளன.
மேலும் மயில், நாரை, சிட்டுக்குருவி, கழுகு, மரங்கொத்தி, குயில், மரகதப் புறா, பருந்து போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன.
தேடித்தேடி பறவைகளை புகைப்படம் எடுப்பவர்களுக்கு இந்த சரணாலயம் ஒரு நல்ல இடம். இன்னொரு தகவல்! - வருடத்தில் எந்த மாதம் நீங்கள் இங்கு சென்றாலும் வெயிலின் தாக்கத்தை உணரலாம். எனவே கோடை காலங்களில் செல்லாதீர்கள்.
எப்படி செல்வது?
- திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து இந்த சரணாலயத்திற்கு பேருந்துகள் உண்டு.
- அருகில் உள்ள ரயில் நிலையம் - திருநெல்வேலி, 16 கி.மீ தொலைவில்.
- அருகில் உள்ள விமான நிலையம் - தூத்துக்குடி, 25 கி.மீ தொலைவில்.





1 comments:
வல்லநாடு அருவாளுக்குதான் பேமஸ்'ன்னு நினச்சேன்.
சரணாலயமும் இருப்பது உங்க பதிவை படிச்ச பின்புதா தெரியுது....
Post a Comment
நிறைகளும் குறைகளும் இங்கே!!