


கிறித்துவ வரலாற்றின் படி இயேசுவின் சீடரான St.Thomas என்பவர் பாலஸ்தீனத்தில் இருந்து புறப்பட்டு கி.பி 52ஆம் ஆண்டு கேரளா வந்தார். கி.பி 72ஆம் ஆண்டு வரை இயேசுவின் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் இப்போது சென்னையில் உள்ள St.Thomas Mount என்னும் இடத்தில் கொல்லப்பட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், அவர் உடற்கூற்றை எடுத்துவந்து இந்த தேவாலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் வசிக்கும் கிறித்துவர்கள் அனைவருக்கும் இது ஓர் சிறந்த தேவலாயமாகும். வருடப் பிறப்பு, கிறிஸ்துமஸ் போன்ற கிறிஸ்தவர்களின் பல முக்கியமான திருவிழாக்கள் இங்கு வெகு சிறப்பாக நடைபெறும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த தேவாலயம் சென்னையின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. நீங்களும் போய் வாருங்கள்.
மேலும் விபரங்கள் - பெசிலிகா , கோதிக் கட்டிடக் கலை.
எப்படி செல்வது?
1) சென்னைக்கு தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2) சென்னையில் பல ரயில் நிலையங்கள் உள்ளது
3) சென்னையில் விமான நிலையமும் உள்ளது.
நேரம் : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
0 comments:
Post a Comment
நிறைகளும் குறைகளும் இங்கே!!